tamilni 599 scaled
உலகம்செய்திகள்

மீண்டும் பிரித்தானியா திரும்ப விரும்பும் இளவரசர் ஹரி

Share

மீண்டும் பிரித்தானியா திரும்ப விரும்பும் இளவரசர் ஹரி

இளவரசர் ஹரி தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்ப விரும்புவதாகவும், ஆனால் அவரது மனைவி மேகன் அது குறித்து அசௌகரியமாக உணர்வதாகவும், அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தன் தந்தையான மன்னர் சார்லசுக்கு உடல் நலம் சரியில்லை என தெரியவந்ததும் பல நூறு மைல் தூரம் பயணித்து, தந்தையைக் காண ஓடோடி வந்தார் இளவரசர் ஹரி.

அவர் மன்னரை சந்தித்துவிட்டு அமெரிக்கா திரும்பியபின் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நான் மீண்டும் பிரித்தானியாவுக்குச் செல்வேன், என்னால் முடிந்தவரை என் குடும்பத்தினரை சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஹரி, தான் மீண்டும் பிரித்தானியா திரும்பும்போது, தன் மனைவி மேகனும், தம்பதியரின் பிள்ளைகளான குட்டி இளவரசர் ஆர்ச்சி மற்றும் குட்டி இளவரசி லிலிபெட்டும் தன்னுடன் பிரித்தானியா வரவேண்டும் என விரும்புவதாகவும், மீண்டும் ராஜ குடும்பத்துடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அது உதவலாம் என்று அவர் கருதுவதாகவும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஹரியின் மனைவி மேகனோ, பிரித்தானியா திரும்ப சங்கோஜப்படுவதாகவும், அவர் பிரித்தானியாவுக்கு வரும்போது அசௌகரியமாக உணரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார் அந்த நபர்.

ஆக, மேகன் பிரித்தானியாவுக்கு வரும்போது, அவர் சகஜமாக உணர்வதற்கு வசதியாக, குடும்பத்துடன் ஜூம் அழைப்புகள் மூலம் அளவளாவிக்கொள்ள திட்டமிடப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...