உலகம்செய்திகள்

ஜேர்மனிக்குச் செல்லும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ஹரி கூறியுள்ள இதுவரை வெளிவராத ஒரு தகவல்

Share

ஜேர்மனிக்குச் செல்லும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ஹரி கூறியுள்ள இதுவரை வெளிவராத ஒரு தகவல்

லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன் தன்னுடன் வர இயலாததால் அவர் கொஞ்சம் அப்செட்டாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், இன்று, தன் கணவரைக் காண ஜேர்மனி செல்கிறார் மேகன். போரில் காயம்பட்ட, உடல் உறுப்புகளை இழந்த, போர் வீரர்களுக்காக, இளவரசர் ஹரி துவக்கிய, இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் ஜேர்மனியில் நடைபெற்றுவருகின்றன.

அவற்றை ஹரி முறைப்படி துவக்கிவைத்த நிலையில், முதல் நாளில் மேகனால் ஜேர்மனிக்கு வரமுடியவில்லை. ஆகவே, அவர் இன்று தன் கணவருடன் இணைந்து விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு களிப்பதற்காக ஜேர்மனியின் Dusseldorfக்கு வருகிறார்.

இந்நிலையில் ஹரியின் மனைவி மேகன் குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், மேகன் 43 சதவிகிதம் நைஜீரிய பின்னணி கொண்டவராம்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேகன், நைஜீரிய அமெரிக்க நகைச்சுவையாளர், எழுத்தாளர் மற்றும் நடிகரான Ziwerekoru (Ziwe) Fumudoh என்பவரை சந்தித்தார். அப்போது மேகன், தானும் 43 சதவிகித நைஜீரியர்தான் என கூறினார். என்றாலும், எந்த வழியில் தான் நைஜீரியர் என அவர் விளக்கமளிக்கவில்லை.

இதே விடயத்தைக் குறித்து இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகளின்போது பேசிய இளவரசர் ஹரியும், தன் மனைவி நைஜீரிய வம்சாவளியினர் என்பதை சமீபத்தில் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...