உலகம்செய்திகள்

தந்தையுடன் 30 நிமிடங்கள்… 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி

Share
tamilni Recovered 2 scaled
Share

தந்தையுடன் 30 நிமிடங்கள்… 26 மணி நேர பயணம்: சிரித்த முகத்துடன் அமெரிக்கா புறப்பட்ட இளவரசர் ஹரி

மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் உறுதியான நிலையில், உடனடியாக லண்டன் திரும்பிய இளவரசர் ஹரி, தற்போது அமெரிக்கா திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 26 மணி நேர லண்டன் விஜயத்திற்கு பின்னர், அமெரிக்காவில் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஹரி இணைந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை லண்டனில் தரையிறங்கிய இளவரசர் ஹரி, மன்னர் சார்லசை சுமார் 40 நிமிடங்கள் வரையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

ஹரி தம்மை சந்திக்க வருவதை அறிந்து மன்னர் சார்லஸ் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு சுமார் 1.30 மணியளவில் இளவரசர் ஹரி லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் காணப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது.

அதாவது லண்டனில் தரையிறங்கிய 26 மணி நேரங்களுக்கு பின்னர் மீண்டும் அவர் விமான நிலையத்தில் காணப்பட்டுள்ளார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், லண்டனில் செலவிட்ட நேரங்களில் இளவரசர் ஹரி ஹொட்டலில் தங்கியதாகவும், அரச குடும்பத்து மாளிகைகளை தவிர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக Sandringham புறப்பட தயாராக இருந்த மன்னர் சார்லஸ், தமது மகன் ஹரி சந்திக்க வருவதை அறிந்து, பயணத்தை தாமதப்படுத்தி காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

சுமார் 30 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டதாகவும், சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் கிளாரன்ஸ் மாளிகையில் இருந்து ஹரி புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஹரியுடனான சந்திப்புக்கு பின்னர் மன்னர் சார்லஸ் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாக அரண்மனை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்- ஹரி சந்திப்பு இந்தமுறை நடக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

லண்டனில் இருந்து புறப்படும் போது இளவரசர் ஹரி சிரித்த முகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னருடன் ஹரி என்ன பேசினார் என்ற தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...