ஹரி - மேகன் விவாகரத்து: மேகன் விதித்துள்ள நிபந்தனைகள்! வௌியான தகவல்
உலகம்செய்திகள்

ஹரி – மேகன் விவாகரத்து: மேகன் விதித்துள்ள நிபந்தனைகள்! வௌியான தகவல்

Share

ஹரி – மேகன் விவாகரத்து: மேகன் விதித்துள்ள நிபந்தனைகள்! வௌியான தகவல்

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் ஒருபக்கமும், அது உண்மையில்லை, வதந்தி என செய்திகள் மறுபக்கமும் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.

இந்நிலையில், தன்னை விவாகரத்து செய்ய, பல நிபந்தனைகளை மேகன் விதித்துள்ளதாக, சில ராஜ குடும்ப நிபுணர்களை மேற்கோள் காட்டி, தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

தனக்கு பெருந்தொகை ஒன்று ஜீவனாம்சமாக வழங்கப்படவேண்டும், குறைந்தபட்சம் 80 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படவேண்டும் என்றும், தங்கள் பிள்ளைகள் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை வளர்க்கும் உரிமை தனக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்றும் மேகன் நிபந்தனை விதித்துள்ளாராம்.

விவாகரத்து செய்யும் ஹரியின் கோரிக்கைக்கு இணங்கவேண்டுமானால், தனக்கு கொடுக்கப்பட்ட சசெக்ஸ் கோமகள் என்னும் பட்டத்தை தான் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்றும் மேகன் நிபந்தனை விதித்துள்ளாராம்.

இதற்கிடையில், மன்னர் சார்லசும் ஹரியும், தங்களுக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து ஒன்றுசேர்ந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மன்னர், தன் மூத்த மகன் வில்லியமுடன் இணைந்து, எப்படியாவது தன் இளைய மகன் ஹரியின் விவாகரத்தை இறுதிசெய்ய உதவ, தன்னாலான உதவிகளைச் செய்ய ஆயத்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...