ஹரியும் மேகனும் பிரிவதாக வெளியாகிவரும் செய்திகள்: நெருங்கிய ஒருவர் விளக்கம்
உலகம்செய்திகள்

ஹரியும் மேகனும் பிரிவதாக வெளியாகிவரும் செய்திகள்: நெருங்கிய ஒருவர் விளக்கம்

Share

ஹரியும் மேகனும் பிரிவதாக வெளியாகிவரும் செய்திகள்: நெருங்கிய ஒருவர் விளக்கம்

இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் பிரிய இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அது குறித்து தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

எங்கு சென்றாலும், மனைவியுடனேயே செல்லும் இளவரசர் ஹரி தனியாக ஆப்பிரிக்கா செல்கிறார். கணவனின் கையைப் பிடித்துக்கொண்டு அவரது முகத்தைப் பார்த்தபடியே நடக்கும் மேகன், தனியாக புராஜக்ட்கள் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஹரியுடைய ஸ்பேர் புத்தகத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் மேகன் கலந்துகொள்ளவில்லை. ஆக, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரச்சினை. அவர்கள் இருவரும் பிரியப்போகிறார்கள் என செய்திகள் வெளியாகிவருகின்றன.

ஆனால், தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர், ஹரியும் மேகனும், தங்களைக் குறித்து வெளியாகிவரும் வதந்திகளால் சலிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜ குடும்ப விமர்சகரான Lara Asprey என்பவர் கூறும்போது, ஹரி, மேகன், இருவருமே உடைந்த குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு அந்த கஷ்டம் தெரியும். ஆகவே, அதே கஷ்டத்தை அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பமாட்டார்கள் என்கிறார்.

அதே நேரத்தில், இருவரும் ஆளுக்கொரு வேலையில் கவனம் செலுத்துவதிலிருந்து இருவரும் பிரிவதற்கான அடையாளங்கள் தெரிவதை மறுப்பதற்கில்லை என்று கூறும் Lara, வேலைகள் தம்பதியரை ஆளுக்கொரு பக்கம் இழுக்கின்றன. அதனால் என்ன ஆகும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும் என்கிறார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...