AP24140475273050 1716181102
உலகம்செய்திகள்

ஈரான் ஜனாதிபதியின் மரணம்!! அதிர்ச்சி வெளியிட்ட ரணில்

Share

ஈரான் ஜனாதிபதியின் மரணம்!! அதிர்ச்சி வெளியிட்ட ரணில்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்(Ebrahim Raisi) திடீர் மரணம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ரைசி மற்றும் அந்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட சிலர் பயணித்த உலங்குவானூர்தி திடீர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரைசியின் மரணம் குறித்து சர்வதேசம் அதிர்ச்சியையும், இரங்கல்களையும் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ரைசியின் திடீர் மரணம் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில்,

“ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல மூத்த ஈரானிய அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசுக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் மறைந்த ஈரான் ஜனாதிபதி ரைசியின் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும், உள்ளது ” என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...