5 42
உலகம்செய்திகள்

கவலைக்கிடமாகும் திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை

Share

கவலைக்கிடமாகும் திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை

திருத்தந்தை பிரான்சிஸின் (Pope Francis) உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

88 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

திருத்தந்தையின் உடல்நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல என்று அவரது மருத்துவக் குழு ஒரு நாள் முன்னதாகவே அறிவித்திருந்த போதிலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் தற்போது அறிவித்துள்ளது.

இந்த சூழலில், உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தின் உச்ச மதத் தலைவரான திருத்தந்தை பிரான்சிஸின் மீட்சிக்காக கிறிஸ்தவ சமூகம் பிரார்த்தனை செய்யத் தொடங்கியுள்ளது.

தனது உடல்நிலை குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு திருத்தந்தை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 683d2e2c6c0e6
செய்திகள்இலங்கை

இலங்கைத் தமிழர் விடிவு இந்திய அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம்: யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் கருத்து!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து...

images 15
செய்திகள்இலங்கை

உப குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் சிறப்புப் பரிந்துரை!

அரச சேவையின் மறுசீரமைப்பு, முறையான வேதனைக் கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல்...

Bribery Commission
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய இழப்பீடு மோசடி: ₹100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்ற 42 முன்னாள் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை!

அரகலய போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும்...

ak am 2003
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ச சொத்துக்கள்: இரகசிய நடவடிக்கையில் இறங்கிய அரசாங்கம்

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை...