உலகம்செய்திகள்

சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை

Share

சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை

கனடாவின் இரண்டு பிரதான சீக்கிய அமைப்புகள், இந்தியாவுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

சீக்கிய தலைவர் ஒருவர் படுகொலையில் இந்திய அரசாங்கத்திற்கு உறுதியான தொடர்பிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அறிவித்த நிலையிலேயே இந்த இரு அமைப்புகளும் கனேடிய அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

ஒன்ராறியோவின் குருத்வாராஸ் கமிட்டி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குருத்வாராஸ் கவுன்சில் ஆகிய இரு சீக்கிய அமைப்புகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளன.

ஜூன் மாதத்தில் நடந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் வெளிநாட்டு சதி இருப்பது தொடர்பில் கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒருமித்த கருத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளன.

செப்டம்பர் 18ம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அம்பலப்படுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடிய உளவு அமைப்புகள் திரட்டிய தரவுகளின் அடிப்படையில், இந்திய அரசாங்கத்திற்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் தொடர்பிருப்பதாக உறுதி செய்திருந்தார்.

காலிஸ்தான் பிரிவினைவாதி என குறிப்பிட்டு ஹர்தீப் சிங் நிஜ்ஜரை கைது செய்ய இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் தொடர்புடைய படுகொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்றே இந்தியா தற்போது மறுத்து வருகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் விளக்கமளித்த பின்னர், என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவிக்கையில், இந்த கொலை வழக்கு விசாரணையில் இந்தியாவையும் உட்படுத்த வேண்டும் என தாம் கியூபெக் மேல்முறையீடு நீதிமன்றத்திற்கு எழுத்து மூலமாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...