3 10
உலகம்செய்திகள்

கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

Share

கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

கனடாவின் ரொறன்ரோவில் இடம் பெற்று வரும் மோசடி சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவின் சில பகுதிகளில் டாக்ஸி கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடிகள் இடம் பெற்று வருவதாக ரொறன்ரோ பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஆறு சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோ பொலிஸார் இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அண்மைய நாட்களாக டாக்ஸி தொடர்பான கொடுக்கல் வாங்கல் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் தங்களை டாக்ஸி சாரதிகளாகவும், பயணிகளாகவும் என அடையாளப்படுத்திக் கொண்டு மோசடிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்களால் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது என கூறுவதாகவும் இதனை தொடர்ந்து அருகாமையில் இருப்பவர்கள் தங்களது அட்டைகளை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது உள்ளீடு செய்யப்படும் இலக்கங்களை பயன்படுத்தி இந்த மோசடிகள் இடம் பெறுவதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...