7 1 scaled
உலகம்செய்திகள்

பிரான்ஸ் கலவரங்களின்போது இளைஞரை சுட்ட பொலிசார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Share

பிரான்ஸ் கலவரங்களின்போது இளைஞரை சுட்ட பொலிசார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிரான்சில் போக்குவரத்து பொலிசாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கலவர பூமியானது.

ஜூன் மாதம், 27ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், Nahel M. என்ற 17 வயது இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து நாட்டில் வன்முறை வெடித்தது. அந்த இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிசார் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

அந்த கலவரங்களைத் தொடர்ந்து, Marseille நகரிலும் கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தின்போது, Hedi (21) என்னும் இளைஞர், தன்னை பொலிசார் தாக்கியதாகவும், ரப்பர் குண்டு ஒன்றால் தான் தாக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின்பும் தன் கண் பார்வையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரைத் தாக்கிய நான்கு பொலிசார் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் Christophe (35) என்னும் பொலிசார் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் சிறையிலடைக்கப்பட்டதற்கு பொலிஸ் யூனியன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தன் கடமையைச் செய்யும்போது பெரிய தவறுகள் செய்தால் கூட, பொலிசாரை சிறையிலடைக்கக் கூடாது என தான் கருதுவதாகத் தெரிவித்திருந்தார் பிரான்ஸ் தேசிய பொலிஸ் துறைத் தலைவரான Frederic Veaux. அவரது கருத்துக்கு மற்ற பொலிஸ் துறையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், Christopheஐ சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி அவரது சட்டத்தரணி Aix-en-Provence நகர நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், பொலிஸ் துறையினரின் ஆதரவையும் மீறி, Christopheஐ சிறையிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

CCTV காட்சிகள் Hedi தாக்கப்பட்டதை தெளிவாகக் காட்டுவதாகத் தெரிவித்துள்ள அரசு தரப்பு சட்டத்தரணி, Christopheஐ விடுவிப்பது வழக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி, அவர் சிறையில்தான் இருக்கவேண்டும் என வாதிட்டார்.

அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, Hedi தாக்கப்பட்ட விடயத்தில் Christopheஇன் பங்களிப்பு உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், தற்போது அவர் Hedi தாக்கப்பட்ட விடயத்தை பகுதியளவிற்கு ஏற்றுக்கொண்டாலும், முன்னர் அவர் அதை மறுத்தது, அவரது தரப்பு நியாயத்தின் நம்பகத்தன்மையை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கிவிட்டது என்றும் கூறி, அவரை விடுவிக்க மறுத்துவிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...