2 18 scaled
உலகம்செய்திகள்

பணியில் இருக்கும்போதே சரிந்து விழுந்த காவலர்! விசாரணையில் அதிர்ச்சி

Share

பணியில் இருக்கும்போதே சரிந்து விழுந்த காவலர்! விசாரணையில் அதிர்ச்சி

அமெரிக்காவில் காவலர் ஒருவர் வலி நிவாரணி மருந்தை அதிகளவில் உட்கொண்டதில் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் ஆக பணியாற்றி வந்தவர் ரிச்சர்ட் கேலி (54).

இவர் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

அதில் கெல்லி Fentanyl மற்றும் methamphetamine ஆகியவற்றை உட்கொண்டதால் உயிரிழந்ததாக தெரிய வந்தது.

இதன்மூலம் அவர் போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என உயரதிகாரி ஃபோர்ட் தெரிவித்தார். மேலும், அவரது கருத்துக்கள் மற்றும் காவல்துறை கண்டுபிடித்ததன் மூலம், கெல்லி மரணத்திற்கு முன்பு போதைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

Fentanyl என்பது ஒரு சக்திவாய்ந்த நரம்புவழி மயக்க மருந்தாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். பின்னர் தோல் இணைப்பு மற்றும் வலி நிவாரணத்திற்கான கலவையாக இது உருவாக்கப்பட்டது. அதேபோல் Methamphetamine என்பது சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருளாகும்.

இவற்றில் Fentanylஐ அதிகளவில் எடுத்துக் கொள்வது கோகையின், ஹெராயின் போன்ற கடினமான போதைப்பொருட்களை எடுத்துக் கொள்வதற்கு சமம் ஆகும்.

கடந்த ஆண்டில், குற்றம் நடந்த இடத்தில் Fentanyl-ஐ கையாள்வதால் பல காவலர்கள் அபாயகரமான, அளவுக்கதிகமான அளவுகளை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த மருந்துடன் தோல் தொடர்பு மட்டும் உடனடியாக அதிகப்படியான அளவை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...