உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

Share

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன் செயல்பட்டுத் தாக்குதலாளியின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்று குண்டடிப்பட்ட அஹமத்-அல்-அஹமதுவை (Ahmad-Al-Ahmad) அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) வைத்தியசாலையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அஹமது-அல்-அஹமதுவின் துணிச்சலைக் கண்டு நெகிழ்ந்த பிரதமர், அவரிடம் உரையாடுகையில் “மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆபத்தில் ஆழ்த்திக் கொண்ட உங்களுக்கு, ஒவ்வொரு அவுஸ்திரேலியர் சார்பாகவும் நன்றி கூறுகிறேன். நீங்கள் தான் அவுஸ்திரேலியாவின் ஹீரோ!” – அந்தோணி அல்பானீஸ், பிரதமர்.

அஹமதுவின் இந்தச் சாகசச் செயலால் மேலும் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன என்று மக்கள் நம்புவதால், அவர் தேசிய “ஹீரோ”வாகப் போற்றப்படுகிறார்.

அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே துப்பாக்கி வைத்திருக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், துப்பாக்கிக் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முடிவெடுத்துள்ளார். ஏனெனில், இந்தச் சம்பவத்தில் பலியான சஜித் என்பவர் மட்டுமே 6 துப்பாக்கிகளை வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...