7 1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் தொடரும் விமான விபத்துகள்! 7 பேர் பலி 19 பேர் காயம்

Share

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் இடம்பெற்ற மற்றுமொரு விமான விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயணிகள் விமானம் ஒன்றும் இராணுவ உலங்கு வானூர்தி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தினை தொடர்ந்து, பிலடெல்பியாவில் பிராந்தியத்தில் குறித்த விபத்து பதிவாகியுள்ளது.

பிலடெல்பியாவில் பிராந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு வணிக வளாகத்திற்கு அருகே ஒரு குழந்தை, அவரது தாயார் மற்றும் நான்கு பேரை ஏற்றிச் சென்ற மருத்துவ போக்குவரத்து விமானமே அங்குள்ள கட்டிடங்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இதன்போது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், மாலை 6:30 மணியளவில் அங்குள்ள உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால், குறைந்தது ஐந்து வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....