1 1 3 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் புகைபிடித்தல் தடை செய்யப்படும் பகுதிகள்: கசிந்த தகவல்

Share

பிரித்தானியாவில் புகைபிடித்தல் தடை செய்யப்படும் பகுதிகள்: கசிந்த தகவல்

பிரித்தானியாவில் இனி கால்பந்து அரங்கத்திற்கு வெளியே, மதுபான விடுதிகளில் புகைபிடித்தல் தடை செய்யப்படும் என்றே தகவல் கசிந்துள்ளது.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தற்போது அமுலில் இருக்கும் புகைபிடிக்கும் தடையை வெளிப்புற இடங்களுக்கும் கடுமையாக நீட்டிக்க திட்டமிட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது. ஆனால் இந்த கடும்போக்கு நடவடிக்கையானது தத்தளிக்கும் மதுபான விடுதிகளுக்கு பேரிடியாக மாறும் என்றே கூறுகின்றனர்.

பிரித்தானியாவில் ஆண்டுக்கு 80,000 பேர்கள் புகைபிடித்தல் காரணமாக மரணமடைவதாக அரசாங்கம் தரப்பில் கூறப்படுகிறது. NHS மருத்துவமனைகளுக்கு இதனால் பேரழுத்தம் ஏற்படுவதுடன், வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான தொகை செலவிடப்படுகிறது.

சிறார்களையும், புகைபிடிக்காதவர்களையும் புகைப்பதால் ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதனால் பிரித்தானியாவில் புகையை ஒழிக்க பல நடவடிக்கைகளை கருத்தில் கொண்டுள்ளதாக அரசாங்கம் தரப்பு தெரிவித்துள்ளது.

உணவகங்களுக்கு வெளியே, சிறு பூங்காக்கள், இரவு விடுதிகளுக்கு வெளியே நடைபாதையிலும் இனி பிகைபிடிக்க தடை செய்யப்படும் என்றே தகவல் கசிந்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...