24 6656e11f6ae3f
உலகம்செய்திகள்

ஆறு மாடிக் கட்டிடத்தில் ஜன்னல் துடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

Share

ஆறு மாடிக் கட்டிடத்தில் ஜன்னல் துடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

சுவிட்சர்லாந்தில், ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றில் ஜன்னல் துடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் தவறி கீழே விழுந்தார்.

நேற்று மதியம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Eaux-Vives என்னுமிடத்தில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் ஆறாவது மாடியிலுள்ள கண்ணாடி ஜன்னல்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 31 வயது நபர் ஒருவர் தவறி கீழே விழுந்தார்.

அவர் விழுந்த இடத்தில் ஒரு கார் நிற்க, அந்தக் காரின்மீது விழுந்துள்ளார் அவர். ஆறாவது மாடியிலிருந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையில், அவர் விழுந்ததால், அந்தக் கார் பயங்கரமாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள் பொலிசார்!

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...