14 19
உலகம்செய்திகள்

பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஹரி பிரிய காரணமாய் அமைந்த தொலைபேசி அழைப்பு

Share

பிரித்தானிய இளவரசர் வில்லியம், ஹரி பிரிய காரணமாய் அமைந்த தொலைபேசி அழைப்பு

இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன் ராஜ குடும்பத்துக்குள் வந்த நாள் முதலே அவருக்கு ராஜ குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

இருப்பினும், மேகன் தொடர்பில், இளவரசர் வில்லியம் ஹரிக்கிடையிலான ஒரு தொலைபேசி அழைப்பு இரு குடும்பங்களையும் பிரித்ததாகத் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்புக்குப் பின், இளவரசர் வில்லியம், தன் குடும்பத்தினரை இளவரசர் ஹரி குடும்பத்தினரிடம் இருந்து பிரித்துவிட்டதாக, ராபர்ட் லேசி (Robert Lacey) என்பவர் எழுதிய, Battle of the Brothers என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் தம்பி ஹரியை அழைத்த வில்லியம், மேகன், ராஜ குடும்பத்தின் மீது வெறுப்பு வைத்துள்ளதாகவும், ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கே திரும்பிவிட ஆரம்பம் முதலே அவர் திட்டம் வைத்திருக்கக்கூடும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

தன் மனைவியைக் குறித்து அண்ணன் வில்லியம் கூறியதைக் கேட்டு கோபத்தில் ஹரி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட, அதன் பிறகு வில்லியம் தன் குடும்பத்தினரை இளவரசர் ஹரி குடும்பத்தினரிடம் இருந்து பிரித்துவிட்டதாக ராபர்ட் தனது புத்தகத்தில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...