புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை
உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை

Share

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை

பிரித்தானியாவில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமாக உதவுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது.

சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறு படகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவுவோருக்கு, அடுத்த ஆண்டு முதல் கடும் அபராதம் விதிக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது.

சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு தங்கள் வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு சொந்தக்காரர்களுக்கு 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட உள்ளது. தற்போது அபராதத்தொகை வெறும் 50 பவுண்டுகள் மட்டுமே.

ஒரே வீட்டில் பல சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை தங்கவைத்துள்ளது தெரியவந்தால், முதன்முறை ஒரு புலம்பெயர்ந்தோருக்கு 10,000 பவுண்டுகள் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. முன்பு இந்த அபராதத்தொகை 1,000 பவுண்டுகளாக இருந்தது.

மேலும், சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை வேலைக்கு வைத்தால், முதன்முறை புலம்பெயர்ந்தோர் ஒருவருக்கு 45,000 பவுண்டுகள் வீதம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. தற்போது இந்த அபராதம் 15,000 பவுண்டுகளாக உள்ளது.

இந்த நடவடிக்கைகள் 2024ஆம் ஆண்டு அமுலுக்கு வர உள்ள நிலையில், உள்துறை அலுவலகம் அது தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க உள்ளது.

ஆக மொத்தத்தில், பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக புலம்பெயர்வோர் நுழைவதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதுடன், அப்படி அவர்கள் நுழைந்துவிட்டாலும், அவர்களுடைய வாழ்வாதாரத்தில் கைவைத்து அவர்களை தண்டிக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதுபோல் தெரிகிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69329d0e7c401
இலங்கைசெய்திகள்

பலத்த மின்னல் எச்சரிக்கை: மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அபாயம்! பொதுமக்கள் பாதுகாப்பாய் இருக்க அறிவுறுத்தல்

பலத்த மின்னலுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre –...

25 69340bc828c36
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் அதிர்ச்சி: 38 நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர் மீது 45 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு!

பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக...

25 69341a3e0ac8b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா...