19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

Share

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

சியால்கோட் மாவட்டத்தில் உள்ள லூனி, அக்னூர் பகுதிக்கு எதிரே உள்ள பயங்கரவாத ஏவுதளமே, இவ்வாறு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு முன்னர், தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது,

ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை பாகிஸ்தான் வான் பாதுகாப்பு தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வரும் நிலையில் இந்திய இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

குறிப்பாக, டெல்லியை நோக்கி வந்த பாகிஸ்தானின் FATAH 1 நெடுந்தூர ஏவுகணையை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...