24 65fdd373a3787
உலகம்செய்திகள்

மரணத்திற்கு பின் இது நடக்குமா? 12,000 ஆண்டுகள் பழமையான மூளையால் விஞ்ஞானிகள் குழப்பம்

Share

மரணத்திற்கு பின் இது நடக்குமா? 12,000 ஆண்டுகள் பழமையான மூளையால் விஞ்ஞானிகள் குழப்பம்

12,000 ஆண்டுகள் பழமையான மனித மூளை பிரித்தானிய விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அலெக்ஸாண்ட்ரா மார்டன் ஹேவர்ட் தலைமையிலான ஆராய்ச்சி, தொல்பொருள் பதிவுகளின் மூலம் உலகளாவிய ஆய்வில் ஈடுபட்டது.

இதில் வியக்கத்தக்க நிலையில் பாதுகாக்கப்பட்ட 4,400க்கும் மேற்பட்ட மனித மூளைகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

ஆனால், அவற்றில் சில 12,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இது மரணத்திற்குப் பிறகு மூளை விரைவாக மோசமடைகிறது என்ற வழக்கமான நம்பிக்கைக்கு மாறாக உள்ளது.

அதாவது, இந்த கண்டுபிடிப்பானது பிரேத பரிசோதனைக்கு பின் மூளையின் விரைவான சிதைவு பற்றி பரவலாக நிலவும் கருத்தை சவால் செய்கிறது.

அதேபோல் இந்த ஆய்வு, சிதைந்த முதல் உறுப்புகளில் மூளையும் அடங்கும் என்ற அனுமனத்திற்கு முரணாக உள்ளது. இந்த பழங்கால மாதிரிகள் நமது பரிணாம வரலாறு மற்றும் கடந்த கால நோய்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தும் பெரும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இதுகுறித்து ஆய்வு ஆசிரியர்கள் கூறும்போது, ”இங்கு தொகுக்கப்பட்டுள்ள காப்பகம், தற்காலத்திற்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய மூளைகளின் விரிவான, முறையான விசாரணையை நோக்கிய முதல் படியை பிரதிபலிக்கிறது. மேலும், அவை உடலில் வளர்சிதை மாற்ற செயலில் உள்ள உறுப்பு மற்றும் மிகவும் பொதுவாக உள்ள உறுப்புகளாக அவை வழங்கும் மூலக்கூறு மற்றும் உருவவியல் தகவல்களை அதிகரிக்க இது அவசியம். இது பாதுகாக்கப்பட்ட மென்மையான திசுக்கள்” என்கின்றனர்.

அத்துடன், பண்டைய மூளைகள் புதிய மற்றும் தனித்துவமான பேலியோபயாலஜிக்கல் நுண்ணறிவுகளை வழங்கக்கூடும். இது பாரிய நரம்பியல் கோளாறுகள், பண்டைய அறிவாற்றல் மற்றும் நடத்தை, நரம்பு திசுக்களின் பரிணாமம் மற்றும் அவற்றின் செயல்பாடுகளின் வரலாற்றை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...