37
இலங்கைஉலகம்செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி: சிதறடிக்கப்படும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

Share

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி: சிதறடிக்கப்படும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் (U.S) குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்க துறையின் (ICE) தடுப்பு காவலில் இலங்கையர்கள் உட்பட 1,445,549 குடியுரிமை பெறாதவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, குறித்த நடவடிக்கைளின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்புகள் இல்லாததால் பெரும்பாலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களின் குடியுரிமையை சரிபார்த்து, பயண ஆவணங்களை உடனடியாக வழங்கி, நாடுகடத்தப்படும் விமானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

இருப்பினும், சில நாடுகள் செயல்முறையை தாமதப்படுத்துவதன் காரணமாக நாடுகடத்தும் செயற்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், நாடுகடத்தப்படவுள்ள மக்களை ஏற்றுக்கொள்வதனை இதுவரை 15 நாடுகள் தாமதமிக்கியுள்ளதுடன், அவற்றின் பட்டியலையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெளியிடப்பட்ட பட்டியலில் இலங்கை சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...