24 663dce029e3ca
உலகம்செய்திகள்

இப்போது கூண்டுக்கிளி அல்ல… தன்னையே கேலி செய்த சார்லஸ் மன்னர்

Share

இப்போது கூண்டுக்கிளி அல்ல… தன்னையே கேலி செய்த சார்லஸ் மன்னர்

பிரித்தானியாவில் ராணுவப் பயிற்சி கல்லூரி ஒன்றில் விஜயம் செய்துள்ள சார்லஸ் மன்னர், தற்போது கூண்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தன்னையே கேலி செய்துள்ளார்.

புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்த பின்னர் பொது சேவைகளில் கலந்துகொள்ளத் தொடங்கியதில் இருந்து தற்போது கல்லூரி விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

தெற்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள அந்த ராணுவ கல்லூரி விழாவில் கலந்துகொண்ட சார்லஸ் மன்னர், இப்படியான ஒரு வாய்ப்பு அமைந்ததும் தம்மை கூண்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாத இறுதியில் இருந்தே சார்லஸ் மன்னர் பொது சேவைகளில் கலந்துகொள்ள தொடங்கியிருந்தார். மன்னர் மிக ஆர்வமாக இருப்பதாகவும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி விழாவில் மன்னர் கலந்துகொள்வது, அவரது இரண்டாவது நிகழ்ச்சி என்றே கூறப்படுகிறது. புதன்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் தனது முதல் வருடாந்திர தோட்ட விருந்தை முன்னெடுத்திருந்தார்.

ஆனால் வாக்களித்துள்ள தொடர் நிகழ்ச்சிகளால், லண்டன் திரும்பியிருந்த தமது இளைய மகன் ஹரியை சந்திக்கும் வாய்ப்பை சார்லஸ் மன்னர் தவறவிட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் குடும்பத்துடன் குடியிருக்கும் இளவரசர் ஹரி திடீர் பயணமாக லண்டன் திரும்பியிருந்தார். ஆனால், நெருக்கடியான சூழலில், மன்னரால் தமது மகனை சந்திக்க ,முடியாமல் போயுள்ளது.

வியாழக்கிழமை இளவரசர் ஹரி உறுதி அளித்திருந்த தமது நிகழ்ச்சிகளில் பரபரப்பாக காணப்பட்டார். இதனால் வியாழக்கிழமையும் தந்தையும் மகனும் சந்திக்க முடியாமல் போனது.

இதனிடையே, லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, ஹரி நைஜீரியா புறப்பட்டு சென்றுவிட்டார் என்றே தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...