15 2 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கை குடும்பத்தின் படுகொலை பயங்கரமான வன்முறைச் செயல்: ட்ரூடோ

Share

இலங்கை குடும்பத்தின் படுகொலை பயங்கரமான வன்முறைச் செயல்: ட்ரூடோ

கனடா – ஒட்டாவா பிராந்தியத்தில் இலங்கை குடும்பத்தினர் 6 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இருந்து இடம்பெயர்ந்த இவர்கள் படுகொலை செய்யப்பட்டமையானது பயங்கரமான வன்முறைச் செயல் என்று அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”ஒட்டாவா புறநகர்ப் பகுதியான பார்ஹேவனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.

2023ல் ஒரு மில்லியன் மக்களை கொண்ட நகரமான ஒட்டாவாவில் 14 கொலைகள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில், 15 கொலைகள் நடந்துள்ளன.

இந்நிலையில் கனேடிய பொலிஸார் கொலை தொடர்பிலான விசாரணைகளை விரைவில் முன்னெடுப்பார்கள் எனவும், கொலைக்கு காரணமானவர்களை விரைவில் அடையாளம் கண்டு உரிய தீர்வு வழங்கப்படும் எனவும் கனேடிய அரசாங்கம் சார்பில் உறுதியளிப்பதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...