GettyImages 1235870887 scaled
உலகம்செய்திகள்

பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

Share

பள்ளிகள் மூடப்பட்டு 800 நாட்கள்; ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கு கல்வி வழங்க சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்க தாலிபான்கள் தயாராக வேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச கல்வி தினம் ஜனவரி 24ம் திகதி கொண்டாடப்படுவதால் நேற்று பள்ளியை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, 6ம் வகுப்புக்கு பின் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டில் பெண்களுக்கு கல்வி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி Roza Otunbayeva, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர், உலக உணவுத் திட்டம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் கல்வி மீதான தடையை நீக்குமாறு தாலிபான்களிடம் கேட்டுக் கொண்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகமான டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைவருக்கும் கல்வியை வழங்க தாலிபான்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் ரோசா ஒடுன்பயேவா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமன்றி முஸ்லிம் உலகிற்கும் கல்வி தேவை என சர்வதேச கல்வி தினத்தில் ஒதுன்பயேவா தெரிவித்தார்.

இஸ்லாத்தில் ஒவ்வொரு நாளும் கல்வி நாள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக சர்வதேச கல்வி தினத்தன்று ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன என்று பெண்கள் உரிமை ஆர்வலர் Tafsir Seyaposh கூறினார். மேலும், தாலிபான்கள் பள்ளிகளைத் திறக்கத் தயாராக வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...