16 4
உலகம்செய்திகள்

ரொறன்ரோவை தாக்கிய பாரிய மழை வெள்ளம்!

Share

ரொறன்ரோவை தாக்கிய பாரிய மழை வெள்ளம்!

கனடாவின் ரொறன்ரோ நகரில் பாரியளவு மழை வெள்ளம் ஏற்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 11 ஆண்டுகளில் ரொறன்ரோவில் பதிவான இரண்டாவது பாரியளவு வெள்ள நிலைமை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றம் தொடர்பிலான கொள்கைகள் நடைமுறைபடுத்தப்பட வேண்டியது அவசியமானது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டில் 90 நிமிடங்களில் 126 மில்லி மீற்றர் மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை, ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மழை மற்றும் புயல் காற்றினால் கூடுதல் அளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

டோன்வெலி போன்ற பகுதிகளில் பாரியளவில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக சில இடங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை தீயணைப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தினால் நகரின் சில அதிவேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் நூறு மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்ததாகவும் புயல் காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலை காரணமாக ரொறன்ரோவின் 170000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...