Business Culture in Canada Evolved Metrics 1 Copy scaled
உலகம்செய்திகள்

ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் கனடா

Share

ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் கனடா

வரி விதிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஒன்ராறியோவின் முதல்வர் பதிலடி கொடுக்கும் விதத்தில் முடிவொன்றை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, உலகிலேயே மிக அதிகமாக மதுபானங்களைக் கொள்முதல் செய்யும் மாகாணமான ஒன்ராறியோ, தற்போது அமெரிக்க மது பானங்களை இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவுக்கு வர இருப்பதாக ஒன்ராறியோவின் முதல்வர் டக் ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது உறுதி என்று கூறியிருக்கிறார்.

இந்த வார தொடக்கத்தில், ஒன்ராறியோவின் முதல்வரான டக் ஃபோர்டு, பல அமெரிக்க மாகாணங்களுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதை நிறுத்தலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால் அந்த மிரட்டல் டொனால்டு ட்ரம்பை கொஞ்சமும் அசைக்கவில்லை. டக் ஃபோர்டு அவ்வாறு முடிவெடுப்பார் என்றால், அது பரவாயில்லை என ட்ரம்ப் பதிலளித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, அமெரிக்கா கனடாவுக்கு மானியம் அளிக்கிறது, நாங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டொலர் கனடாவுக்கு மானியமாக வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இனி அதன் தேவை இருக்காது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...