11 1
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் அமோக வெற்றி

Share

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் அமோக வெற்றி

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஈழத்தமிழர் இருவர் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

ஒண்டாரியா மாகாண சபைத் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டக் ஃபோர்ட் தலைமையிலான புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கமைய புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் கட்சி 81 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. என்.டி.பி. (NDP) 26 இடங்களைப் பெற்றுள்ளனர். இதன்மூலம் மீண்டும் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளனர்.

லிபரல் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், கட்சித் தலைவர் பானி க்ராம்பி (Bonnie Crombie) தனது தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

இந்நிலையில் வெற்றிக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்த டக் ஃபோர்டு, “ஒன்டாரியோவை பாதுகாக்க ஒரு வலுவான, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது பெரும்பான்மை ஆட்சியை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தத் தேர்தல் புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோர் மீண்டும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் மூன்றாவது தடவையாகவும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகி உள்ளமை விசேட அம்சமாகும்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...