24 662f666df3eca
உலகம்செய்திகள்

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்

Share

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்

கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் e-cigarette பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மழலையர் பள்ளி முதல் தரம் 6 வரை உள்ள மாணவர்கள் தங்கள் தொலைபேசிகளை (Silent mode)ல் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும், ஆசிரியர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், தரம் 7 முதல் 12 வரையிலான மாணவர்கள் தங்கள் தொலைபேசிபேசிகளை வகுப்பு வேளைகளில் மட்டும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறும் மாணவர்களிடம் இருந்து தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலையில் பயன்படுத்தப்படும் இணையத்தில் இனி சமூக ஊடகங்கள் அனைத்தும் நீக்கப்படும். அத்துடன் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை மாணவர்கள் பதிவு செய்வதும் உரிய அனுமதியின்றி அதை பகிர்வதும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதை எவ்வாறு கண்காணிப்பார்கள் அல்லது கட்டுப்படுத்துவார்கள் என்பது தொடர்பில் விளக்கப்படவில்லை. செப்டெம்பர் முதல் மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் e-cigarette பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களால் கண்டெடுக்கப்பட்டால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

மட்டுமின்றி, ஒன்ராறியோ அரசாங்கம் சார்பில், மாணவர்களின் e-cigarette பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 30 மில்லியன் டொலர் செலவில் பாடசாலைகளில் வேப் டிடெக்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு மேம்படுத்தல்களை நிறுவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....