13 6
உலகம்செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

Share

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் (Joe Biden) வெற்றிவாய்ப்பு கணிசமான அளவாக குறைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா (Barrack Obama) கருதுவதாக சர்வதேச ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனநாயகக் கட்சி (Democratic Party) உறுப்பினர்களிடம் ஒபாமா கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபத் தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலகவில்லை எனில், அது வெள்ளை மாளிகைக்குள் ஜனநாயகக் கட்சி உள்நுழைவதை தடுக்கும் என ஒபாமா குறித்த கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.

அத்துடன், இந்தத் தேர்தலில் பைடனால் நிச்சயம் வெற்றிபெற முடியாது என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) ஜோ பைடனிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்.

இதிலிருந்து, ஜனநாயகக் கட்சியின் மூத்த ஆளுமைகளான ஒபாமா மற்றும் பெலோசி போன்றோர் பைடனின் தேர்தலில் போட்டியிடும் முடிவை மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளமை புலப்படுகின்றது.

எனினும், இந்த வலியுறுத்தலை பைடன் நிராகரித்துள்ளதாகவே தெரியவருகின்றது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பை (Donald Trump) தோற்கடித்தது போன்று இம்முறையும் வெற்றிபெறும் நம்பிக்கையில் பைடன் உள்ளதாக அவரின் துணை பிரசார மேலாளர் குவென்டின் ஃபுல்க்ஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....