13 6
உலகம்செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

Share

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் (Joe Biden) வெற்றிவாய்ப்பு கணிசமான அளவாக குறைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா (Barrack Obama) கருதுவதாக சர்வதேச ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனநாயகக் கட்சி (Democratic Party) உறுப்பினர்களிடம் ஒபாமா கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபத் தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலகவில்லை எனில், அது வெள்ளை மாளிகைக்குள் ஜனநாயகக் கட்சி உள்நுழைவதை தடுக்கும் என ஒபாமா குறித்த கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.

அத்துடன், இந்தத் தேர்தலில் பைடனால் நிச்சயம் வெற்றிபெற முடியாது என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) ஜோ பைடனிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்.

இதிலிருந்து, ஜனநாயகக் கட்சியின் மூத்த ஆளுமைகளான ஒபாமா மற்றும் பெலோசி போன்றோர் பைடனின் தேர்தலில் போட்டியிடும் முடிவை மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளமை புலப்படுகின்றது.

எனினும், இந்த வலியுறுத்தலை பைடன் நிராகரித்துள்ளதாகவே தெரியவருகின்றது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பை (Donald Trump) தோற்கடித்தது போன்று இம்முறையும் வெற்றிபெறும் நம்பிக்கையில் பைடன் உள்ளதாக அவரின் துணை பிரசார மேலாளர் குவென்டின் ஃபுல்க்ஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...