13 6
உலகம்செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

Share

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் (Joe Biden) வெற்றிவாய்ப்பு கணிசமான அளவாக குறைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா (Barrack Obama) கருதுவதாக சர்வதேச ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனநாயகக் கட்சி (Democratic Party) உறுப்பினர்களிடம் ஒபாமா கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபத் தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலகவில்லை எனில், அது வெள்ளை மாளிகைக்குள் ஜனநாயகக் கட்சி உள்நுழைவதை தடுக்கும் என ஒபாமா குறித்த கலந்துரையாடலின் போது கூறியுள்ளார்.

அத்துடன், இந்தத் தேர்தலில் பைடனால் நிச்சயம் வெற்றிபெற முடியாது என அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) ஜோ பைடனிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்.

இதிலிருந்து, ஜனநாயகக் கட்சியின் மூத்த ஆளுமைகளான ஒபாமா மற்றும் பெலோசி போன்றோர் பைடனின் தேர்தலில் போட்டியிடும் முடிவை மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளமை புலப்படுகின்றது.

எனினும், இந்த வலியுறுத்தலை பைடன் நிராகரித்துள்ளதாகவே தெரியவருகின்றது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப்பை (Donald Trump) தோற்கடித்தது போன்று இம்முறையும் வெற்றிபெறும் நம்பிக்கையில் பைடன் உள்ளதாக அவரின் துணை பிரசார மேலாளர் குவென்டின் ஃபுல்க்ஸ் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...