rtjy 4 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு அறிவிப்பு

Share

ஜேர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு அறிவிப்பு

ஜேர்மனி நாட்டில் குடியுரிமை பெறுவதையும், இரட்டை குடியுரிமையை அனுமதிப்பதையும் எளிதாக்கும் வகையிலான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், இந்த புதிய சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி ஜேர்மன் குடியுரிமை பெற காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இப்போது குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவேண்டுமானால் இரண்டு நிபந்தனைகள் உண்டு முதலாவதாக, பெரும்பாலானவர்கள் எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்பதோடு ஜேர்மன் மொழித்திறனில் B1 மட்டத்தில் தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.

அடுத்தபடியாக, ஜேர்மனியில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், ஜேர்மன் மொழித்திறனில் B2 மட்டம் அல்லது அதைவிட அதிக தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.

ஆனால் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டத்தின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்து அவர்கள் B1 மட்டத்தில் மொழித்திறன் கொண்டிருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் C1 மட்டத்தில் மொழித்திறன் கொண்டிருந்தால் மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் விண்ணப்பிக்க காத்திருப்போர் தேவையான ஆவணங்களை தயாராக வைத்துக்கொண்டு சட்டம் நிவைவேறும் காலம் வரை மொழித்திறனை வளர்த்துக்கொள்வது சிறந்த யோசனையாக முன்வைக்கப்படுவதோடு சட்டம் நிறைவேறியதும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...