rtjy 4 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு அறிவிப்பு

Share

ஜேர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு அறிவிப்பு

ஜேர்மனி நாட்டில் குடியுரிமை பெறுவதையும், இரட்டை குடியுரிமையை அனுமதிப்பதையும் எளிதாக்கும் வகையிலான சட்டம் ஒன்றைக் கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், இந்த புதிய சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி ஜேர்மன் குடியுரிமை பெற காத்திருக்கும் வெளிநாட்டவர்கள் இப்போது குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவேண்டுமானால் இரண்டு நிபந்தனைகள் உண்டு முதலாவதாக, பெரும்பாலானவர்கள் எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்பதோடு ஜேர்மன் மொழித்திறனில் B1 மட்டத்தில் தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.

அடுத்தபடியாக, ஜேர்மனியில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், ஜேர்மன் மொழித்திறனில் B2 மட்டம் அல்லது அதைவிட அதிக தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்.

ஆனால் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டத்தின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்து அவர்கள் B1 மட்டத்தில் மொழித்திறன் கொண்டிருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் C1 மட்டத்தில் மொழித்திறன் கொண்டிருந்தால் மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் விண்ணப்பிக்க காத்திருப்போர் தேவையான ஆவணங்களை தயாராக வைத்துக்கொண்டு சட்டம் நிவைவேறும் காலம் வரை மொழித்திறனை வளர்த்துக்கொள்வது சிறந்த யோசனையாக முன்வைக்கப்படுவதோடு சட்டம் நிறைவேறியதும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...