23 654605ab6d49e md
உலகம்செய்திகள்

புறக்கணிக்கப்படும் வட மாகாண வைத்தியசாலைகள்: தீர்வை பெற்றுத்தருவதாக திலீபன் எம்.பி உறுதி

Share

புறக்கணிக்கப்படும் வட மாகாண வைத்தியசாலைகள்: தீர்வை பெற்றுத்தருவதாக திலீபன் எம்.பி உறுதி

வட மாகாணத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தீர்வை பெற்றுத்தருவதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (03.11.2023) விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர், வைத்தியர் யோகேஷ்வரனுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு :தீவிர பாதுகாப்பில் வைத்தியசாலை

அவர் மேலும் கூறுகையில்,
“வடமாகாணத்தின் வைத்தியசாலைகளில் கட்டிட, ஆளணித்துவ மற்றும் சிகிச்சை உபகரணங்கள் ரீதியாக மன்னார் பொது வைத்தியசாலையே மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருந்த போதிலும் வைத்தியர்களால் மக்களுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றது.

எனினும், நிலவிவரும் குறைபாடுகளுக்கான தீர்வுகளை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் என்னால் பெற்றுத் தர முடியும் என நான் நம்புகின்றேன்.

மேலும் வைத்தியசாலையின் தேவைகளை, நடைபெற இருக்கும் வரவு செலவுத்திட்ட கூட்டங்களின் போது முன்வைத்து, அவற்றை நிறைவேற்றுவேன்” என தெரிவித்திருந்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...