tamilni 28 scaled
உலகம்செய்திகள்

வடகொரியா மீதான போர்த் தொடுப்பை யாராலும் தடுக்க முடியாது

Share

வடகொரியா மீதான போர்த் தொடுப்பை யாராலும் தடுக்க முடியாது

வடகொரியா தனது செயற்கைக்கோள் நடவடிக்கைகளில் தலையிடுவதைப் போர் அறிவிப்பாகக் கருதுவதாகவும், அமெரிக்காவின் மூலோபாய சொத்துக்களுக்கு எதிராக ஏதேனும் தாக்குதல் நடந்தால், அதன் போர்த் தொடுப்பை யாராலும் தடுக்க முடியாது எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களின் நம்பகத்தன்மையை நீக்குவதன் மூலம் விண்வெளியில் எந்த அமெரிக்க தலையீட்டினையும் முடக்குவோம் என வடகொரியா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டியே அமெரிக்க இந்த கருத்தை முன்வைத்துள்ளது.

“சட்டவிரோதமாக சமீபத்திய தொழில்நுட்பங்களை ஆயுதமாக்குவதன் மூலம் ஒரு இறையாண்மை அரசின் சட்டப்பூர்வ பிரதேசத்தை மீறுவதற்கு அமெரிக்கா முயற்சித்தால், அதனை அழிப்பதற்கான நடவடிக்கைகளை வடகொரியா பரிசீலிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட கொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை நவம்பர் 21 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகக் கூறுகிறது.

மேலும் இந்த செயற்கை கோளானது அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி, ஜப்பான் குவாம் ஆகியவற்றில் உள்ள இராணுவ தளங்களின் புகைப்படங்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விடுத்த அழைப்பை வட கொரியா நிராகரித்திருந்தது.

இது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவாா்த்தையின் மூலம் சமரசம் செய்துகொள்ளக்கூடியது இல்லை.

எனவே, அதற்காக அமெரிக்கா விடுக்கும் அழைப்பை ஒருபோதும் ஏற்க முடியாது.” என்றாா்.

சோவியத் யூனியனின் ஆதரவுடன் வட கொரியாவும், அமெரிக்க ஆதரவுடன் தென் கொரியாவும் நடத்திய கொரியப் போா் கடந்த 1953-இல் முடிவுக்கு வந்தது.

அதன் பிறகும் அமெரிக்கா-வடகொரியா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. எனினும், கடந்த 2018இல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியிருந்தார்.

இருப்பினும், இந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில், தனது உளவு செயற்கைக்கோளை வட கொரியா அண்மையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, தங்களுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த வட கொரியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...