கடவுச்சீட்டு, விசா ஏதுமில்லை... பிரித்தானிய விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட தாயாரும் மகளும்
உலகம்செய்திகள்

கடவுச்சீட்டு, விசா ஏதுமில்லை… பிரித்தானிய விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட தாயாரும் மகளும்

Share

கடவுச்சீட்டு, விசா ஏதுமில்லை… பிரித்தானிய விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட தாயாரும் மகளும்

ஸ்பெயின் நாட்டில் இருந்து தான்சானியா செல்லும் வழியில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என குறிப்பிட்டு, தாயார் மற்றும் அவரது 3 வயது மகளை பிரித்தானிய விமான நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

லண்டன் கேட்விக் விமான நிலையம்
தான்சானியாவை சேர்ந்த 29 வயது தாயார் Benadetha Rwehumbiza ஸ்பெயின் நாட்டில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையம் ஊடாக கத்தார் சென்று அங்கிருந்து சொந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

மே 8ம் திகதி லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லண்டனில் இருந்து கத்தார் செல்லும் அவர்களுக்கான இணைப்பு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்னொரு விமானத்தில் கத்தார் புறப்படும் வகையில் புதிய போர்டிங் பாஸ்களை இவர்களுக்கு அளித்துள்ளனர். இருப்பினும் புதிய சிக்கல் ஏற்பட்டது.

அதாவது Benadetha-வின் 3 வயது மகள் பிரித்தானியாவில் பிறந்தவர் என்பதால், அவருக்கு பிரித்தானிய கடவுச்சீட்டு இருந்துள்ளது. Benadetha-வுக்கு இல்லை. மட்டுமின்றி, பிரித்தானியாவுக்குள் பயணிக்க போதுமாக ஆவணங்களும் அவரிடம் இல்லை.

இந்த நிலையில், ஹீத்ரோ விமான நிலையம் வந்து சேர்ந்த அவருக்கு நாட்டைவிட்டு வெளியேற 24 மணி நேர அவகாசம் அளித்துள்ளதுடன், மீறினால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் அதிகாரிகளால் எச்சரித்துள்ளனர்.

100 பவுண்டுகள் செலவிட்டு ஹீத்ரோ
கேட்விக் விமான நிலையத்தில் இருந்து 100 பவுண்டுகள் செலவிட்டு ஹீத்ரோ சென்றதாக கூறும் Benadetha, பிரித்தானியாவில் தங்க வேண்டும் என்று தாம் வரவில்லை. இணைப்பு விமானம் ரத்தானதால் ஹீத்ரோ செல்ல வேண்டியிருந்தது என்றார்.

மேலும், உரிய கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாமல் லண்டன் தெருவில் அவர்களை அதிகாரிகள் தவிக்க விட்டதாக Benadetha-வின் பிரித்தானிய கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சட்டவிரோத புலம்பெயர் மக்களை பிரித்தானிய அரசாங்கம் நடத்தும் முறை அவருக்கு தெரியும் என்பதால், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் நெருக்கடியில் அவர் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மொத்த குழப்பத்திற்கும் காரணம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் என குறிப்பிட்டுள்ள Benadetha, கேட்விக் விமான நிலையத்தில் வைத்தே அவர்கள் தங்களை கைவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...