25 6935c8f4182b0
உலகம்செய்திகள்

உலக சாதனைப் புத்தகத்தில் நிதிஷ் குமார்: 10ஆவது முறையாகப் பீகார் முதல்வராகப் பதவியேற்ற பெருமை!

Share

நடந்து முடிந்த இந்தியப் பீகார் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், 10ஆவது முறையாகப் பீகார் முதல்வராகப் பதவியேற்றது சர்வதேச அரங்குகளில் பேசுபொருளாகியுள்ளது.

லண்டனில் உள்ள உலக சாதனைப் புத்தகத்தில் (World Book of Records) நிதிஷ் குமாரின் பெயரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பெயரும் இடம்பிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“இந்தியாவின் மாநிலமொன்றின் முதல்வராக 10ஆவது முறையாகப் பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார் உலக சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்,” என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியச் செயல் தலைவர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், 20 வருடங்களாக அவர் பீகார் முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...