25 6935c8f4182b0
உலகம்செய்திகள்

உலக சாதனைப் புத்தகத்தில் நிதிஷ் குமார்: 10ஆவது முறையாகப் பீகார் முதல்வராகப் பதவியேற்ற பெருமை!

Share

நடந்து முடிந்த இந்தியப் பீகார் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், 10ஆவது முறையாகப் பீகார் முதல்வராகப் பதவியேற்றது சர்வதேச அரங்குகளில் பேசுபொருளாகியுள்ளது.

லண்டனில் உள்ள உலக சாதனைப் புத்தகத்தில் (World Book of Records) நிதிஷ் குமாரின் பெயரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பெயரும் இடம்பிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“இந்தியாவின் மாநிலமொன்றின் முதல்வராக 10ஆவது முறையாகப் பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார் உலக சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்,” என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியச் செயல் தலைவர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், 20 வருடங்களாக அவர் பீகார் முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...