24 66010d346fe44
உலகம்செய்திகள்

137 பள்ளி குழந்தைகள் விடுதலை! நைஜீரியாவை புரட்டி போட்ட கடத்தல் சம்பவம்

Share

137 பள்ளி குழந்தைகள் விடுதலை! நைஜீரியாவை புரட்டி போட்ட கடத்தல் சம்பவம்

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு நைஜீரியாவில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி கடூனா(Kaduna) மாநிலத்தின் குரிகா (Kuriga) நகரில் இருந்து குறைந்தது 137 பள்ளி சிறுவர்கள் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டனர்.

இந்த குழந்தைகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் விடுதலை மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும், இந்த கொடுமை அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுவிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் அனுபவத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் “மன சமூக ஆலோசனை” வழங்கப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

பள்ளி குழந்தைகளை குறிவைத்த இந்த கடத்தல் நிகழ்வு நைஜீரியாவில் தேசிய அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் நடந்த முதல் பள்ளி குழந்தைகள் கடத்தல் இதுவாகும்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...