24 66010d346fe44
உலகம்செய்திகள்

137 பள்ளி குழந்தைகள் விடுதலை! நைஜீரியாவை புரட்டி போட்ட கடத்தல் சம்பவம்

Share

137 பள்ளி குழந்தைகள் விடுதலை! நைஜீரியாவை புரட்டி போட்ட கடத்தல் சம்பவம்

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு நைஜீரியாவில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி கடூனா(Kaduna) மாநிலத்தின் குரிகா (Kuriga) நகரில் இருந்து குறைந்தது 137 பள்ளி சிறுவர்கள் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டனர்.

இந்த குழந்தைகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் விடுதலை மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும், இந்த கொடுமை அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுவிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் அனுபவத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் “மன சமூக ஆலோசனை” வழங்கப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

பள்ளி குழந்தைகளை குறிவைத்த இந்த கடத்தல் நிகழ்வு நைஜீரியாவில் தேசிய அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் நடந்த முதல் பள்ளி குழந்தைகள் கடத்தல் இதுவாகும்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...