24 66010d346fe44
உலகம்செய்திகள்

137 பள்ளி குழந்தைகள் விடுதலை! நைஜீரியாவை புரட்டி போட்ட கடத்தல் சம்பவம்

Share

137 பள்ளி குழந்தைகள் விடுதலை! நைஜீரியாவை புரட்டி போட்ட கடத்தல் சம்பவம்

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு நைஜீரியாவில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி கடூனா(Kaduna) மாநிலத்தின் குரிகா (Kuriga) நகரில் இருந்து குறைந்தது 137 பள்ளி சிறுவர்கள் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டனர்.

இந்த குழந்தைகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் கடத்தப்பட்ட 137 பள்ளி குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் விடுதலை மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும், இந்த கொடுமை அவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுவிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் அனுபவத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் “மன சமூக ஆலோசனை” வழங்கப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

பள்ளி குழந்தைகளை குறிவைத்த இந்த கடத்தல் நிகழ்வு நைஜீரியாவில் தேசிய அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் நடந்த முதல் பள்ளி குழந்தைகள் கடத்தல் இதுவாகும்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...