சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!
உலகம்செய்திகள்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!

Share

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!

விலைவாசி உயர்வாலும், பணவீக்கத்தாலும் நாட்டு மக்கள் அவதியுற்றுக்கொண்டிருக்க, மக்கள் கவனத்தை திசை திருப்புவதுபோல், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது பிரித்தானிய அரசு.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஒழித்துக்கட்டுவது என கங்கணங்கட்டிக்கொண்டு, தற்போது தெருவிலேயே இறங்கிவிட்டார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

சமீப காலமாக, பிரித்தானிய ஊடகங்கள் சில, சட்டவிரோத புலம்பெயர்வோரை சந்தித்து பேட்டிகள் எடுத்துவருகின்றன. ஆரம்பத்தில் அவைகளின் நோக்கத்தைப் பார்த்தால், ஏதோ அவர்களுடைய பரிதாப நிலைமையை வெளிப்படுத்தி அவர்களுக்கு உதவுவதுபோலவே இருந்தது.

ஆனால், உண்மையில் அந்த ஊடகங்கள் வெளியிட்ட விவரங்கள், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ளதுபோல் தெரிகிறது.

உதாரணமாக, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சின்னச் சின்ன வேலைகள் செய்து பிழைப்பை நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வேலைக்கு வைக்கும் நிறுவனங்களுக்கும், அவர்களுக்கு வீடு வாடகைக்கு விடுவோருக்கும் விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு உயர்த்தியது பிரித்தானிய அரசு.

இந்நிலையில், உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு பிழைப்பு நடத்திவரும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீது அடுத்த குறிவைக்கப்பட்டுள்ளது.

அதற்காக தெருவிலேயே இறங்கி நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

ஆம், உணவு டெலிவரி செய்வோரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்து, அவர்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என தெரியவந்தால், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாகத் இறங்கியுள்ளார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

அவ்வகையில், வரிசையாக பல சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரித்தானியர்களின் வேலையை இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பறித்துக்கொள்வதாக குற்றம்சாட்டுகிறார்கள் அதிகாரிகள்.

ஆனால், சட்டப்படி உரிமம் பெற்று உணவு டெலிவரி செய்யும் பிரித்தானியர்கள் பலர், இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரிடம் கூடுதல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு பதில் அவர்களை உணவு டெலிவரி செய்யும் வேலையைச் செய்ய அனுமதிப்பதாக, பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...