உலகம்செய்திகள்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!

Share
சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!
சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!
Share

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!

விலைவாசி உயர்வாலும், பணவீக்கத்தாலும் நாட்டு மக்கள் அவதியுற்றுக்கொண்டிருக்க, மக்கள் கவனத்தை திசை திருப்புவதுபோல், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது பிரித்தானிய அரசு.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஒழித்துக்கட்டுவது என கங்கணங்கட்டிக்கொண்டு, தற்போது தெருவிலேயே இறங்கிவிட்டார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

சமீப காலமாக, பிரித்தானிய ஊடகங்கள் சில, சட்டவிரோத புலம்பெயர்வோரை சந்தித்து பேட்டிகள் எடுத்துவருகின்றன. ஆரம்பத்தில் அவைகளின் நோக்கத்தைப் பார்த்தால், ஏதோ அவர்களுடைய பரிதாப நிலைமையை வெளிப்படுத்தி அவர்களுக்கு உதவுவதுபோலவே இருந்தது.

ஆனால், உண்மையில் அந்த ஊடகங்கள் வெளியிட்ட விவரங்கள், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ளதுபோல் தெரிகிறது.

உதாரணமாக, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சின்னச் சின்ன வேலைகள் செய்து பிழைப்பை நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வேலைக்கு வைக்கும் நிறுவனங்களுக்கும், அவர்களுக்கு வீடு வாடகைக்கு விடுவோருக்கும் விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு உயர்த்தியது பிரித்தானிய அரசு.

இந்நிலையில், உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு பிழைப்பு நடத்திவரும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீது அடுத்த குறிவைக்கப்பட்டுள்ளது.

அதற்காக தெருவிலேயே இறங்கி நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

ஆம், உணவு டெலிவரி செய்வோரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்து, அவர்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என தெரியவந்தால், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாகத் இறங்கியுள்ளார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

அவ்வகையில், வரிசையாக பல சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரித்தானியர்களின் வேலையை இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பறித்துக்கொள்வதாக குற்றம்சாட்டுகிறார்கள் அதிகாரிகள்.

ஆனால், சட்டப்படி உரிமம் பெற்று உணவு டெலிவரி செய்யும் பிரித்தானியர்கள் பலர், இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரிடம் கூடுதல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு பதில் அவர்களை உணவு டெலிவரி செய்யும் வேலையைச் செய்ய அனுமதிப்பதாக, பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...