சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!
உலகம்செய்திகள்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!

Share

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்ட நிலை!

விலைவாசி உயர்வாலும், பணவீக்கத்தாலும் நாட்டு மக்கள் அவதியுற்றுக்கொண்டிருக்க, மக்கள் கவனத்தை திசை திருப்புவதுபோல், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது பிரித்தானிய அரசு.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஒழித்துக்கட்டுவது என கங்கணங்கட்டிக்கொண்டு, தற்போது தெருவிலேயே இறங்கிவிட்டார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

சமீப காலமாக, பிரித்தானிய ஊடகங்கள் சில, சட்டவிரோத புலம்பெயர்வோரை சந்தித்து பேட்டிகள் எடுத்துவருகின்றன. ஆரம்பத்தில் அவைகளின் நோக்கத்தைப் பார்த்தால், ஏதோ அவர்களுடைய பரிதாப நிலைமையை வெளிப்படுத்தி அவர்களுக்கு உதவுவதுபோலவே இருந்தது.

ஆனால், உண்மையில் அந்த ஊடகங்கள் வெளியிட்ட விவரங்கள், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ளதுபோல் தெரிகிறது.

உதாரணமாக, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சின்னச் சின்ன வேலைகள் செய்து பிழைப்பை நடத்தி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வேலைக்கு வைக்கும் நிறுவனங்களுக்கும், அவர்களுக்கு வீடு வாடகைக்கு விடுவோருக்கும் விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு உயர்த்தியது பிரித்தானிய அரசு.

இந்நிலையில், உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு பிழைப்பு நடத்திவரும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீது அடுத்த குறிவைக்கப்பட்டுள்ளது.

அதற்காக தெருவிலேயே இறங்கி நடவடிக்கைகளைத் துவக்கிவிட்டார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

ஆம், உணவு டெலிவரி செய்வோரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்து, அவர்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என தெரியவந்தால், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாகத் இறங்கியுள்ளார்கள் புலம்பெயர்தல் துறை அதிகாரிகள்.

அவ்வகையில், வரிசையாக பல சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரித்தானியர்களின் வேலையை இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பறித்துக்கொள்வதாக குற்றம்சாட்டுகிறார்கள் அதிகாரிகள்.

ஆனால், சட்டப்படி உரிமம் பெற்று உணவு டெலிவரி செய்யும் பிரித்தானியர்கள் பலர், இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரிடம் கூடுதல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு பதில் அவர்களை உணவு டெலிவரி செய்யும் வேலையைச் செய்ய அனுமதிப்பதாக, பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...