2 10 scaled
உலகம்செய்திகள்

அடுத்த மிஸ் இங்கிலாந்து அழகி என எதிர்பார்க்கப்பட்ட இளம்பெண் போட்டியிலிருந்து விலகல்: காரணம் என்ன தெரியுமா?

Share

அடுத்த மிஸ் இங்கிலாந்து அழகி என எதிர்பார்க்கப்பட்ட இளம்பெண் போட்டியிலிருந்து விலகல்: காரணம் என்ன தெரியுமா?

மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு இளம்பெண், போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த நடாஷா (Natasha Beresford, 26), உலகின் மேக் அப் அணியாத அழகிப்போட்டியில் வென்ற முதல் பெண் ஆவார்.

மிஸ் லண்டன் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், மே மாதம் Wolverhamptonஇல் நடைபெற உள்ள மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்க இருந்தார். அவர் மிஸ் இங்கிலாந்து அழகியாக நிச்சயம் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் ஆவார்.

ஆனால், தான் அந்தப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என தற்போது அறிவித்துள்ளார் நடாஷா.

நடாஷா போட்டியிலிருந்து விலக என்ன காரணம் என்றால், மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ள மே மாதத்தின் அதே வார இறுதியில் அவரது நெருங்கிய தோழியின் திருமணம் நடைபெற உள்ளதாம்.

தான் தன் தோழியின் திருமணத்தில், மணமகளின் தோழியாக அவருடன் நடைபயிலப்போவதாக ஏற்கனவே அவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டதாகவும், ஆகவே தன்னால் அழகிப்போட்டியில் கலந்துகொள்ளமுடியாது என்றும் கூறியுள்ளார் நடாஷா.

நடாஷாவுக்கு பதிலாக மிஸ் லண்டன் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த Temi Adeyemi (26) என்னும் இளம்பெண் தற்போது மிஸ் இங்கிலாந்து அழகிப்போட்டியின் இறுதிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...