tamilni 194 scaled
உலகம்செய்திகள்

அடுத்த வாரிசு நான் தான்… மன்னர் சார்லசின் ’ரகசிய மகன்’ கூறும் சில அதிரவைக்கும் தகவல்கள்

Share

அடுத்த வாரிசு நான் தான்… மன்னர் சார்லசின் ’ரகசிய மகன்’ கூறும் சில அதிரவைக்கும் தகவல்கள்

மன்னர் சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவர், மன்னர் நலம்பெறவேண்டும் என வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதுடன், சில அதிரவைக்கும் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பிறந்து ஒரு அவுஸ்திரேலிய தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்டவர் Simon Dorante-Day (57). தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் அவரது ரகசிய காதலியாக இருந்த கமீலாவுக்கும் பிறந்த குழந்தை என்று கூறி அவர் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடிப்பதுண்டு.

தனது இளவயது புகைப்படங்களைப் பார்த்தால் சார்லசைப்போன்ற கன்னங்களும், கமீலாவைப்போன்ற தலைமுடியும் தனக்கு இருப்பதைக் காணலாம் என அவர் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், தனது முகநூல் புத்தகத்தில் சைமன் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மன்னரை வாழ்த்தியதோடு நிற்கவில்லை சைமன். கூடவே அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

ஆம், தான் மன்னர் சார்லசுடைய மகன் என்பதை நிரூபிப்பதற்காக, மன்னர் சார்லசுடைய இளைய மகனான இளவரசர் ஹரியை தாங்கள் தொடர்பு கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் சைமன்.

தான் மன்னர் சார்லசுடைய மகன் என்பதை நிரூபிக்க, தங்களுக்கு ஹரி உதவக்கூடும் என நம்பத்தகுந்த ஒருவரிடமிருந்து தனக்கும் தன் மனைவியாகிய எல்வியானாவுக்கும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் சைமன்.

ஆகவே, ஹரியை சந்தித்து, அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, அவரது DNAவை கேட்கலாம் என தங்களுக்கு ஒருவர் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார் சைமனின் மனைவியாகிய எல்வியானா.

தனக்கு அசாதாரண விதங்களில் நோய்களை குணமாக்கக்கூடியவர்களைத் தெரியும் என்று கூறும் சைமன், மன்னர் சார்லஸ், தான்தான் அவருடைய மகன் என்னும் உண்மையை ஒப்புக்கொண்டால், தான் அவர் நலம்பெற உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நான்தான் மன்னர் சார்லசுடைய மகன் என நான் நிரூபிக்கும்போது, எல்லாமே மாறிவிடும் என்று கூறும் சைமன், அரியணையேறும் வரிசையில் அடுத்ததாக நான் இருப்பேன், எல்வியானா என் ராணியாக இருப்பார், அப்புறம் அடுத்த மன்னரும் ராணியும் வில்லியமும் கேட்டும் அல்ல, நாங்கள்தான் என்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...