tamilni 291 scaled
உலகம்செய்திகள்

8 கண்கள், 8 கால்கள் கொண்ட புதிய தேள் இனம் கண்டுபிடிப்பு

Share

8 கண்கள், 8 கால்கள் கொண்ட புதிய தேள் இனம் கண்டுபிடிப்பு

தாய்லாந்தில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் புதிய வகை தேள் இனம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பூமியில் இன்னும் எந்த மனிதனும் பார்த்திராத எத்தனையோ உயிரினங்கள் உள்ளன. பல விலங்கினங்களின் புதிய இனங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

துணை வெப்பமண்டல ஆசியாவின் பெரும்பாலான பகுதிகள் இத்தகைய அரிய உயிரினங்களின் தாயகமாக இருக்கிறது.

புதிய உயிரினங்கள் அல்லது அவற்றின் புதைபடிவங்கள் இந்தியாவிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் அடிக்கடி காணப்படுகின்றன.

தற்போது, ​​தாய்லாந்தில் புதிய வகை தேள் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது வனவிலங்கு ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வகை தேள் எட்டு கண்கள் மற்றும் எட்டு கால்கள் கொண்டது. இந்த இனம் Euskapiops குழுவிற்கு சொந்தமானது மற்றும் Euskapiops krachan என்று அழைக்கப்படுகிறது.

இந்த புதிய வகை தேள் (Scorpio Species) தாய்லாந்தின் Kaeng Krachan தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட எந்த தேள்களிலிருந்தும் வேறுபட்டது என்று விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது.

இது குறித்து Zookeys இதழில் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் Kaeng பூங்காவின் டென்சேரியம் மலைத்தொடரில் முகாமிட்டு, அதைக் கண்டறிய இரவும் பகலும் உழைத்தனர். இந்த வகை தேள்கள் பாறைகளுக்கு அடியில் வாழ்கிறது.

ஆராய்ச்சியாளர் 3 ஆண் மற்றும் ஒரு பெண் தேள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார். யூஸ்கார்பியோப்ஸ் கிளையினத்தின் அனைத்து தேள்களும் இந்த பண்புகளைக் கொண்டுள்ளன.

இவை மற்ற தேள் வகைகளை விட சிறிய உடலைக் கொண்டுள்ளன. அதிக பழுப்பு நிறம். பெண் தேள்கள் ஆண்களை விட அடர்த்தியானவை.

அவைகளுக்கு எட்டு கண்களும் எட்டு கால்களும் உள்ளன. இந்த கிளையினத்தின் தேள்கள் காத்திருந்து இரையை வேட்டையாடுகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...