9 31
உலகம்செய்திகள்

கனடாவிற்கான எக்ஸ்பிரஸ் நுழைவு முறையில் புதிய மாற்றம்

Share

கனடாவிற்கான எக்ஸ்பிரஸ் நுழைவு முறையில் புதிய மாற்றம்

2025ஆம் ஆண்டு முதல் கனடாவில் வேலை வாய்ப்புக்கான கூடுதல் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயன்முறை மாற்றத்தின் மூலம் கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவு(Express Entry) முறையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சில பணிகளில் அந்நாட்டு தொழிலாளர்களுக்கு பதிலாக வெளிநாட்டவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதற்கு தேவையான ஆவணமாக ‘LMIA'(Labour Market Impact Assessment) உள்ளது. தற்போது, எக்ஸ்பிரஸ் நுழைவு முறையில் புதிய மாற்றம் நடைமுறைக்கு வருமானால், ஆவணங்களை சட்டவிரோதமாக வாங்குவது அல்லது விற்பனை செய்வது போன்ற முறைகேடுகள் குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எக்ஸ்பிரஸ் நுழைவு முறை மூலம் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறும் விண்ணப்பதாரர்களின் வேலை வாய்ப்புகளின் முக்கியத்துவம் குறைக்கப்படும்.

இதேவேளை, இந்த மாற்றம் கனடாவில் தற்காலிகமாக வேலை செய்து வரும் வெளிநாட்டவர்களை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை வேலையொப்பத்துடன் விண்ணப்பித்தவர்கள் அல்லது நிறுவனத்தால் அழைக்கப்பட்டவர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...