11 20
உலகம்செய்திகள்

பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Share

பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் அண்மையில் வெடித்த வன்முறைகளுக்குப் பிறகு, பிரித்தானியர்களுக்கு புதிதாக ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் சமீபத்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்த வன்முறைகளைத் தொடர்ந்து, பிரித்தானியர்களில் நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு வலதுசாரியினர் குறித்த அச்சம் உருவாகியுள்ளதாக ஐப்சோஸ்(Ipsos) என்னும் ஆய்வமைப்பு வெளியிட்ட சமீபத்திய ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.

மேலும், அந்த வன்முறைகளுக்கு, பொதுவாக, அரசியல்வாதிகள் யாரும் சரியாக பதிலளிக்கவில்லையென மக்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆய்வில் மக்களிடம் எந்தெந்த விடயங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு, பொது சேவைகள் குறித்து என 84 சதவிகிதம் பேரும், பொருளாதாரம் குறித்துதான் அதிக கவலை என 83 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர்.

அடுத்தபடியாக, வலதுசாரி பயங்கரவாதம் குறித்துதான் தாங்கள் அதிகம் கவலைப்படுவதாக, 73 சதவிகிதம் பிரித்தானியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், இதே கேள்விகளை இந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களிடையே கேட்டபோது, பயங்கரவாதம் குறித்து தாங்கள் அதிகம் கவலைப்படுவதாக தெரிவித்தவர்களின் எண்ணிக்கையைவிட, தற்போது வலதுசாரி பயங்கரவாதம் குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளவர்கள் எண்ணிக்கை 11 சதவிகிதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...