11 3
உலகம்செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடையை விதிக்க தாயாராகும் அமெரிக்கா

Share

உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள ரஷ்யா மீது அழுத்தத்தைத் தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் வங்கி மற்றும் எரிசக்தி நடவடிக்கைகள் உட்பட ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அதிகாரிகள் இறுதி செய்துள்ளதாக மூன்று அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த இலக்குகளில் அரசுக்கு சொந்தமான ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் வங்கித் துறைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய நிறுவனங்கள் அடங்கும் என்று நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தடைகள் தொடர்பான ஆவணத்திற்கு  ட்ரம்ப் ஒப்புதல் அளிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ரஷ்யாவின் அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு அவர் விலக்கு அளித்திருந்தார்.

எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ட்ரம்பின் அழைப்புகளை நிராகரித்திருந்தார்.

இந்த செயற்பாடுகளின் பின்னணியிர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணைக்குழு “ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் சில தண்டனை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது,” என்று கூறப்படுகிறது.

இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் அளிக்க வேண்டும், இது முற்றிலும் அவருடைய அழைப்பு,” என்று கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...