உலகம்செய்திகள்

புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்திய முக்கிய நாடு : வேலையற்றோருக்கு மகிழ்ச்சி தகவல்

Share
10 35
Share

புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்திய முக்கிய நாடு : வேலையற்றோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஜேர்மனியில் (Germany) புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மன் அரசாங்கம் அதன் Consular Services Portal-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்பங்களை நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய டிஜிட்டல் விசா முறை ஜேர்மனியில் வேலை, கல்வி மற்றும் பயிற்சிக்கான விசாக்களை விரைவாக அனுமதிக்க உதவுகின்றது

ஜேர்மனியில் தொழிலாளர்களுக்கான கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 400,000 திறமையான பணியாளர்கள் தேவைப்படுவதாக வெளியுறவு அமைச்சர் அனலேனா பேயர்போக் தெரிவித்துள்ளார்.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதற்காக அதிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த புதிய டிஜிட்டல் விசா முறைமை விரைவாகவும் எளிமையாகவும் உலகளாவிய திறமையான பணியாளர்களுக்கு ஜேர்மனியில் வேலை வாய்ப்புகளைத் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...