24 6698417921a24
உலகம்செய்திகள்

கனேடிய மாகாணமொன்றில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை

Share

கனேடிய மாகாணமொன்றில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை

கனடாவின்(Canada) பிரின்ஸ் ஆப் எட்வெர்ட் தீவு (Prince Edward Island) பகுதியில் மாணவர்கள் வகுப்பறையில் தொலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரின்ஸ் ஆப் எட்வர்ட் மாகாண அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

குறித்த தடையானது எதிர்வரும் ஆண்டில் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தரம் 7 முதல் 12 வரையிலான மாணவர்கள் கல்வியியல் நோக்கத்திற்காக தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு ஆசிரியர்கள், அனுமதி வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசியை கொண்டு முன்னெடுக்கப்படும் மோசமான நடவடிக்கைகளை தடுப்பதற்கே இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், விசேட தேவையுடைய மற்றும் மருத்துவ தேவையுடைய மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியூ பிரவுன்ஸ்விக், நோவா ஸ்கோசியா போன்ற பகுதிகளில் அலைபேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...