மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண்! பரிதாபமாக பலி
உலகம்செய்திகள்

மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண்! பரிதாபமாக பலி

Share

மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண்! பரிதாபமாக பலி

நேபாளத்தில் மாதவிடாய் காரணமாக குடியிருப்பில் இருந்து வெளியே தனியாக தங்க வைக்கப்பட்ட இளம் பெண் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

நேபாளத்தின் Baitadi மாவட்டத்தை சேர்ந்த 16 வயது அனிதா சந்த் என்பவரே, மாதவிடாய் காரணமாக தனியாக தங்கியிருந்த நிலையில், பாம்பு தீண்டி மரணமடைந்தவர்.

அவர் தூக்கத்தில் இருந்த போது பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது. chhaupadi எனப்படும் இந்த சட்டத்திற்கு புறம்பான செயலால், 2019-க்கு பின்னர் மரணமடையும் முதல் பெண் இவர் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, மாதவிடாய் நாட்களில் பெண்களை தனியாக தங்க வைக்கும் இந்த நடைமுறையை அகற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பயனளிக்காமல் போகிறது என்று எதிர்ப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

chhaupadi எனப்படும் இந்த நடைமுறையானது நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மாதவிடாய் காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அசுத்தமாக இருப்பார்கள் என்பதால், அவர்களை தனியாக தங்க வைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், chhaupadi நடைமுறையை பின்பற்ற கட்டாயப்படுத்துபவர்களுக்கு 3 மாத சிறையும் உள்ளூர் பணத்தில் 20 பவுண்டுகள் அபராதமும் விதித்து, 2005ல் தடை செய்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அனிதா சந்த் மரணமடைந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்த பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அனிதா சந்த் மரணமடையும் போது அவர் மாதவிடாய் நாட்களில் இல்லை என்றே குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

2019ல் கடைசியாக chhaupadi நடைமுறையால் பெண் ஒருவர் மரணமடைந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக, எதிர்ப்பாளர்கள் திரண்டு 7,000 மாதவிடாய் குடிசைகளை சேதப்படுத்தினர்.

ஆனால் அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று பரவ, கவனம் அதன் பின்னால் சென்றது எனவும், மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் மாதவிடாய் குடிசைகள் புதிதாக கட்டப்பட்டது எனவும் கூறுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...