மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண்! பரிதாபமாக பலி
உலகம்செய்திகள்

மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண்! பரிதாபமாக பலி

Share

மாதவிடாய் நாட்களில் தனியாக தங்க வைக்கப்பட்ட இளம்பெண்! பரிதாபமாக பலி

நேபாளத்தில் மாதவிடாய் காரணமாக குடியிருப்பில் இருந்து வெளியே தனியாக தங்க வைக்கப்பட்ட இளம் பெண் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

நேபாளத்தின் Baitadi மாவட்டத்தை சேர்ந்த 16 வயது அனிதா சந்த் என்பவரே, மாதவிடாய் காரணமாக தனியாக தங்கியிருந்த நிலையில், பாம்பு தீண்டி மரணமடைந்தவர்.

அவர் தூக்கத்தில் இருந்த போது பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது. chhaupadi எனப்படும் இந்த சட்டத்திற்கு புறம்பான செயலால், 2019-க்கு பின்னர் மரணமடையும் முதல் பெண் இவர் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, மாதவிடாய் நாட்களில் பெண்களை தனியாக தங்க வைக்கும் இந்த நடைமுறையை அகற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பயனளிக்காமல் போகிறது என்று எதிர்ப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

chhaupadi எனப்படும் இந்த நடைமுறையானது நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது மாதவிடாய் காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அசுத்தமாக இருப்பார்கள் என்பதால், அவர்களை தனியாக தங்க வைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், chhaupadi நடைமுறையை பின்பற்ற கட்டாயப்படுத்துபவர்களுக்கு 3 மாத சிறையும் உள்ளூர் பணத்தில் 20 பவுண்டுகள் அபராதமும் விதித்து, 2005ல் தடை செய்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அனிதா சந்த் மரணமடைந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்த பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அனிதா சந்த் மரணமடையும் போது அவர் மாதவிடாய் நாட்களில் இல்லை என்றே குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

2019ல் கடைசியாக chhaupadi நடைமுறையால் பெண் ஒருவர் மரணமடைந்தார். அதன் பின்னர் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக, எதிர்ப்பாளர்கள் திரண்டு 7,000 மாதவிடாய் குடிசைகளை சேதப்படுத்தினர்.

ஆனால் அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று பரவ, கவனம் அதன் பின்னால் சென்றது எனவும், மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் மாதவிடாய் குடிசைகள் புதிதாக கட்டப்பட்டது எனவும் கூறுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...