24 66e14198f0797
உலகம்செய்திகள்

மனிதன் வாழக்கூடிய மாற்றிடம் குறித்து நாசா வெளியிட்டுள்ள தகவல்

Share

மனிதன் வாழக்கூடிய மாற்றிடம் குறித்து நாசா வெளியிட்டுள்ள தகவல்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் மனிதன் வாழக்கூடிய ஒரு நிலவு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலம் இந்த முக்கிய மைல்கல்லை கடப்பதற்கான தகுதிகளை பெற்றுக்கொண்டுள்ளது என நாசா அறிவித்துள்ளது.

வியாழன் கிரகத்தின் நிலவுகளில் ஒன்றில் மனிதர் வாழக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி குறித்த விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

 

வியாழன் கிரகத்தில் காணப்படும் கடுமையான கதிர்வீச்சு சூழ்நிலையில் விண்கலத்தின் கருவிகள் செயலிழக்காமல் தொழிற்படுவதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த விண்கலத்திற்கு பயன்படுத்தக் கூடிய டிரான்சிஸ்டர்கள் தொடர்பில் கடந்த நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

யுரோப்பா கிளிப்பர் என்ற இந்த விண்கலத்தை ஏவுவதற்கு தொழில்நுட்ப ஆய்வுகுழு அனுமதி வழங்கியுள்ளது.

 

20000 மடங்கு காந்தப்புல சக்தி

இந்த விண்கலம் ஞாயிற்று தொகுதியில் பூமியைத் தவிர வேறும் கிரகங்களில் அல்லது இடங்களில் ஜீவராசிகள் வாழ்கின்றனவா என்பது குறித்து கண்டறியும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

வியாழன் கிரகத்தில் பூமியை விடவும் 20000 மடங்கு காந்தப்புல சக்தி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

எனவே காந்தப்புல சக்திக்கு ஈடுகொடுக்கக்கூடிய சாதனங்களைக் கொண்டு விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சேதமடைந்தால் தாமாகவே பழுதுபார்க்கக்கூடிய கட்டமைப்பு காணப்படவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போர்ட் சிட்டி கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் சடலமாக மீட்பு: இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மர்ம மரணம்!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு போர்ட் சிட்டி கடற்கரைப்...

09 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை முறை மாற்றம்: நிரந்தர பாதுகாப்பு இனி இல்லை!

பிரித்தானியாவில் புகலிடம் கோருபவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இனி நிரந்தரமானது அல்ல என்று உள்துறைச் செயலர் ஷபானா...

08 1
செய்திகள்உலகம்

ஈரான் – இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடுவதாக ஜோர்டான் அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் மற்றும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜோர்டான் அரசு...

07 1
செய்திகள்உலகம்

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு – போர் உச்சக்கட்டம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தித் தளங்களை இலக்கு...