கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
உலகம்செய்திகள்

கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

Share

கடற்கரையில் மாயமான குழந்தையை தேட மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

ஒன்ராறியோவிலுள்ள கடற்கரை ஒன்றில் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனதாக தகவல் வெளியானதும், கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக்கூட்டமும் கடலில் இறங்கிய நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

ஒன்ராறியோவின் Edward County beach என்னும் கடற்கரையில் கடந்த வாரம் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள். தகவலறிந்து கடற்கரைக்கு வந்த பொலிசார் கண்ட காட்சி அவர்களை நெகிழவைத்துள்ளது.

ஆம், குழந்தை கடலில் விழுந்திருக்கலாம் என்ற தகவல் கிடைக்கவே, கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக் கூட்டமும் கடலில் இறங்கியுள்ளது.

ஒரு வலை போல, பிள்ளையைத் தவறவிட்டுவிடக்கூடாதென எண்ணி, அனைவரும் கடல் நீரை அங்குல அங்குலமாக அலசியுள்ளனர்.

அரை மணி நேரத்துக்குள் அந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளாள். குழந்தையைக் காப்பாற்றுவதற்காக சற்றும் தயங்காமல் கடலில் இறங்கிய பொதுமக்களுக்கு தங்கள் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Share

1 Comment

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...