உலகம்செய்திகள்

முகேஷ் அம்பானியின் 5 லட்சம் சதுர அடி Jio World Garden; ஒரு நாள் வாடகை?

Share
24 2 scaled
Share

முகேஷ் அம்பானியின் 5 லட்சம் சதுர அடி Jio World Garden; ஒரு நாள் வாடகை?

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான மும்பையில் வடிவமைக்கப்பட்டுள்ள Jio World Garden இன் ஒரு நாள் வாடகை விலை தெரியவந்துள்ளது.

இந்தியாவின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி கருதப்படுகிறார்.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் தொழில்கள், மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காக அடிக்கடி வைரலாகிக் கொண்டு இருப்பார்கள்.

அம்பானி குடும்பம் இந்தியாவின் பணக்காரக் குடும்பம் மற்றும் ஆண்டிலியா என்று அழைக்கப்படும் ரூ. 15000 கோடி மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான Jio World Garden குறித்து ஒரு சில தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றது.

மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தின் மையப்பகுதியில் இந்த Jio World Garden அமைந்துள்ளது. இது 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த Jio World Garden சர்வதேச மாநாட்டு மையம், உயர்தர ஹோட்டல்கள், சொகுசு வணிக வளாகங்கள், அதிநவீன கலை அரங்கம், சினிமா, வணிக அலுவலகங்கள் மற்றும் தடையற்ற Wi-Fi இணைப்பு உள்ளிட்ட பல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுமார் 2,000 வாகனங்களை நிறுத்தி வைக்குமளவுக்கு வாகன தரிப்பிடம் இருக்கிறது.

Lakme Fashion Week, Arijit Singh Concert, Ed Sheeran Concert மற்றும் JioWonderland போன்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறது.

Jio World Garden வாடகைக்கு கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ரூ. 15 லட்சம் வரை பணத்தை அறவிடுகிறது. இதற்கு வரிகள் ஏதும் இல்லை.

நிகழ்வுகள் இல்லாத நாட்களில் 10 ரூபாய் கட்டணத்தை செலுத்தி இந்த இடத்தை பார்வையிடலாம்.

இந்த இடம் பல உயர்மட்ட நிகழ்வுகளை நிகழ்த்துவதற்காகவும் கௌரவத்தின் சின்னமாக கருதப்படுகிறது.

மேலும் முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி இந்த இடத்தில் தான் ஷ்லோகா மேத்தாவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...