24 65ff36354be1c
உலகம்செய்திகள்

ரஷ்யாவையே அதிர வைத்த தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த புடின்

Share

ரஷ்யாவையே அதிர வைத்த தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த புடின்

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையே நடுங்க வைத்தது.

இச்சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாக முதலில் தெரிய வந்தது. அதன் பின்னர் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 133 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரில், நான்கு சந்தேக நபர்கள் வெளிநாட்டு குடிமக்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Krasnogorsk-வில் உள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இச்சம்பவத்தை ”கொடூரமான மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்” என கடுமையாக கண்டித்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது உரையில், கொடூர சம்பவத்தை ”காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்” என்று குறிப்பிட்டதுடன், ‘தேசிய துக்க தினம்’ என அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் துணைப் பிரதமர் டாட்டியானா கோலிகோவா (Tatyana Golikova) கூறுகையில், மருத்துவ நிறுவனங்களில் 107 நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 3 குழந்தைகள், அதில் ஒரு குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றார்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...