24 65ff36354be1c
உலகம்செய்திகள்

ரஷ்யாவையே அதிர வைத்த தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த புடின்

Share

ரஷ்யாவையே அதிர வைத்த தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த புடின்

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையே நடுங்க வைத்தது.

இச்சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாக முதலில் தெரிய வந்தது. அதன் பின்னர் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 133 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரில், நான்கு சந்தேக நபர்கள் வெளிநாட்டு குடிமக்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Krasnogorsk-வில் உள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இச்சம்பவத்தை ”கொடூரமான மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்” என கடுமையாக கண்டித்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது உரையில், கொடூர சம்பவத்தை ”காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்” என்று குறிப்பிட்டதுடன், ‘தேசிய துக்க தினம்’ என அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் துணைப் பிரதமர் டாட்டியானா கோலிகோவா (Tatyana Golikova) கூறுகையில், மருத்துவ நிறுவனங்களில் 107 நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 3 குழந்தைகள், அதில் ஒரு குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...